பாணாவரம் அடுத்த பள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் கணேசன் (65), விவசாயி. இவரது மகன் ராமன்(29). இவர்கள் விவசாய நிலத் திலேயே சிமென்ட் ஷீட்டால் கொட்டகை அமைத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கணேசன் இயற்கை உபாதைக்காக வெளியில் சென்றார். அப்போது, பம்ப்செட் ஸ்டார்ட்டரில் கைப்பட்டு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அங்கேயே பலியானதாக கூறப்படுகிறது. மறுநாள் விழித்து எழுந்ததும், வெளியில் தந்தை இறந்து கிடந்ததை பார்த்து ராமன் அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும். போலீசார் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.