ஆற்காடு கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராணி(60). இவர் கடந்த 1ம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். 

பைக்கை உறவினர் சவுந்தரபாண்டியன் ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிக்கொண் டிருந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து ஆற்காடு சென்றனர். காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் அருகே சென்றபோது, பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்த ராணி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். 

இதுகுறித்து அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.