ராணிப்பேட்டை நகராட்சியில் இரு வார்டுகளில் போட்டியிட்ட தாய், மகன் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராணிப்பேட்டை நகராட்சியில் இரு வார்டுகளில் போட்டியிட்ட தாய், மகன் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். நகராட்சியின் 27 மற்றும் 30 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் மகன் துரைக்குமார் மற்றும் தாய் திலவதி ஆகியோர் ஒரே நேரத்தில் போட்டியிட்டனர். இதில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற நிலையில், அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.