ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் நகர்புற ஊள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து கடந்த 28ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் இன்றோடு 1293 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் மனுக்கள் பெறப்படும் பணிகள் நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரான பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதில் மாவட்டத்தில் உள்ள6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளின் வார்டுகளில் போட்டியிட மொத்தம் 1293 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
நகராட்சி | மனுக்கள் |
---|---|
அரக்கோணம் | 216 |
ஆற்காடு | 116 |
மேல்விஷாரம் | 137 |
ராணிப்பேட்டை | 126 |
சோளிங்கர் | 167 |
வாலாஜா | 88 |
மற்றும் பேரூராட்சிகளான
பேரூராட்சி | மனுக்கள் |
---|---|
அம்மூர் | 70 |
கலவை | 49 |
காவேரிப்பாக்கம் | 64 |
நெமிலி | 53 |
பணப்பாக்கம் | 44 |
தக்கோலம் | 65 |
திமிரி | 56 |
விளாப்பாக்கம் | 46 |
என நகராட்சிகளில் மொத்தம் 846 மனுக்களும் பேரூராட்சிகளில் மொத்தம் 447 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.