தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 53 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 28,515 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். 28,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,13,534 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 32,52,751 ஆக அதிகரித்துள்ளது. 30,01,805 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,412 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,591 பேரும் கோவை 3,629 பேரும் திருப்பூரில் 1,877 செங்கல்பட்டில் 1,696 பேரும் சேலத்தில் 1,431 கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.