தமிழகத்தில் இன்று 30,215 பேருக்கு தொற்று.!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று 1,43,004 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில், 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 31,64,205 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று கொரோனாவால் 46 பேர் உயிரிழப்பு. 

இன்று 24,639 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைவிட இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.