ஆற்காடு, தேவி நகரில் நகர பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு ஆற்காடு நகர பாமக செயலாளர் அறிவுச்சுடர் தலைமை வகித்தார்.
நகர தலைவர் சஞ்சீவி ராயன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முரளி கலந்துகொண்டு வருகின்ற நகராட்சி தேர்தல் பற்றி பல்வேறு ஆலோசனை களை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர வன்னியர் சங்க செயலாளர் பிரபாகரன், நகர துணை செயலாளர் சேகர், பொற்செல்வன், உதயா, சுரேஷ், கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.