ராணிப்பேட்டை அருகே கலவை கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த சுமார் 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்
அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மினி லோடு வேனை போலீசார் சந்தேகமடைந்து மடக்கி பிடித்துள்ளனர் ஆனால் அந்த வேனையில் இருந்த டிரைவர் மற்றும் உதவியாளர் இருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இருப்பினும் போலீசார் அந்த வேனை சோதனையிட்டதில் அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட100 கேன்களில் 3ஆயிரத்து 500லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது என்று தெரியவந்தது.
பிறகு வேனில் இருந்த சாராயம் மற்றும் வேனை கலவைப் போலீஸார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்
பின்னர் அவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலால் போலீஸாரிடம் ஒப்படைத்தனர் .
அதனைத்தொடர்ந்து மதுவிலக்கு கலால் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கலவை அடுத்த செய்யாத்து வண்ணம் கிராமத்தில் தனிநபர் வீட்டுமனைகள் போடப்பட்டிருந்த அந்த இடத்தில் கூடாரமாக இறந்த வைக்கோல் போருக்குள் மர்ம நபர்கள் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் இதனை அடுத்து.
கலவை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அப்போது வைக்கோல் போரில் சோதனையிட்டபோது அதில் மறைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 397 கேன்களில் இருந்த 13. 895 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அதை.
வாலாஜாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து எரிசாராயத்தை யார் பதுக்கி வைத்திருந்தார்கள் அதேபோன்று வீட்டுமனை யாருடையது என்பதை பற்றியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கலவை அருகே விவசாய நிலத்தில் உள்ள வைக்கோல் போரில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
