ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த காவேரிப்பாக்கத்தில் பஜார் வீதியில் கற்பகம் கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகின்றது இந்தக் கடையில் வாரம் செவ்வாய் வியாழன் சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இயங்கி வருகின்றனர் இதில் கவரை தெருவில் கோட்டைத் தெரு செங்காட்டங் தெரு ஊற்றி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் நேற்று பொது மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது அப்போது தரமில்லாத அரிசி வழங்குவதாகக் கூறப்படுகிறது இதனால் பொதுமக்கள் விற்பனையாளரிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் மேலும் நியாய விலை கடை விற்பனையாளர் எங்களுக்கு சரியான முறையில் பதில் அளிக்காததால் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் நியாயவிலைக்கடை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

இதுகுறித்து அப்பகுதி கூறுகையில் நியாய விலை கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் திறக்க வேண்டிய கடை ஒரு நாள் மட்டுமே திறக்கப்படுகிறது மேலும் அரிசி எங்களுக்கு வழங்கும் போது குறைவாகவும் தரமில்லாத அரசிகளையும் பல மாதங்களாக வழங்கி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் மூன்று மாதங்களாக பருப்பும் எங்களுக்கு வழங்கவில்லை மண்ணேயில் ஒரு லிட்டருக்கு அரை லிட்டர வழங்கப்படுகிறது 5கிலோ முக்கடைகலைக்கு ஒரு கிலோ தான் வழங்குகிறார்கள் என நியாய விலை கடைக்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் குற்றம் சாட்டி வருகின்றனர் 

என்வே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கும் வாரத்தில் மூன்று நாட்கள் கடைகளை கடை திறந்து இருக்க வேண்டும் என்றும் நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வைத்துள்ளனர்.