👉1858ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் மறைந்தார்.


பிறந்த நாள் :-

பி.கக்கன்
👉 விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.

👉 இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

👉 இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

👉 எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த பி.கக்கன் 73வது வயதில் (1981) மறைந்தார்.


கோபுலு
👉 பிரபல ஓவியர் கோபுலு 1924ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோபாலன்.

👉 இவருக்கு இளம் வயதில் ஓவியத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஓவிய மேதை மாலியால் ஈர்க்கப்பட்டு அவரை சந்தித்து அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். 1941-ல் தீபாவளி மலருக்காக ராமர் பட்டாபிஷேகம் படத்தை வரைந்து வருமாறு மாலு கூறினார். அந்த ஓவியம் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு இவரது பெயரை கோபுலு என்று மாலி மாற்றினார்.

👉 தில்லானா மோகனாம்பாள், துப்பறியும் சாம்பு போன்ற கதைகளின் கதாபாத்திரங்கள் இவரது கையில் உயிர்பெற்று வாசகர்களின் உள்ளத்தை கவர்ந்தவைகள். கலைமாமணி, எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.

👉 பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்த சாதனையாளர் கோபுலு, 90வது வயதில் (2015) மறைந்தார்.