ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தென்னை வித்து பண்ணை ஓன்று உள்ளது இந்தப் பண்ணையில் பலவகை தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகள் நலனுகாகவும் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த தென்னங்கன்றுகளை அளித்து வருகிறார்கள் 

அந்த வகையில் தற்போது அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன ஒரு மரக்கன்று மானிய விலையில் ரூபாய் 50க்கும் விற்கப்பட்டு வருகிறது தேவைபடும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 9092371212. 9884325515 என்ற இந்த செல் நம்பரை தொடர்புகொண்டு தென்னங்கன்றுகளை வாங்கி பயன் பெறலாம் இன்று நவ்லாக் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை பண்ணை துணை இயக்குனர் லதாசண் தெரிவித்துள்ளார்.