தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் தாக்கம் குறைய குறைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
வருகிற திங்கட்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது.
மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் மேலும் தளர்வுகள்
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்
மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்
காலை 6 முதல் மாலை 7 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மின் சாதனங்கள் விற்பனைக்கு அனுமதி
ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி
பாத்திர கடைகள், பேன்சி, அழகு சாதன பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகளுக்கும் அனுமதி
ஜெராக்ஸ், சலவை, தையல் அச்சகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட அனுமதி
23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி
23 மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
23 மாவட்டங்களில் 50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
4 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி
அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது
அனைத்து நகை கடைகளும் குளிர்சாதன வசதியின்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நகை கடைகள் செயல்பட அனுமதி
குளிர்சாதன வசதியின்றி அனைத்து துணி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து துணி கடைகள் செயல்பட அனுமதி
தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் அனுமதி