தமிழக அரசு இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி இராணிபேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 525 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32154 ஆக உள்ளது. இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27236 ஆக இருக்கின்றது.
மேலும் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4551 ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உள்ளது.